Friday, April 12, 2013

'பொது பல சேனாவிற்கு எதிராக மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம்'





'பொது பல சேனாவிற்கு எதிராக மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் நேற்ற நடத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை நடத்த
விடாது கலைத்ததாக தெரிவித்தனர்.

கொழும்பு தும்முள்ள சந்தியிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 'பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு' என்னும் அமைப்பே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஏனைய மதங்களை மதித்து நடப்பதே புத்தபிரானின் தத்துவம் என்றும், பொது பல சேனா அமைப்பின் கொள்கைகள் பௌத்த கொள்கைகளுக்கு முரணானது என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர். சமூக வலைத்தளம் ஒன்றின் மூலமாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment